அன்னூர் அருகே அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகை கொள்ளை

published 2 years ago

அன்னூர் அருகே அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகை கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை   கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். 

மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த நகைகள் நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை  தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe