தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறந்த ஆசிரியர் விருது

published 2 years ago

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறந்த ஆசிரியர் விருது

கோவை: சரவணம்பட்டியில் கே. ஜி. ஐ. எஸ். எல் குழுமத்தின்  சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழ நடைபெற்றது.

இந்த விழாவில் கே. ஜி. ஐ. எஸ். எல்.  குழும இயக்குநர் பத்மஸ்ரீ மருத்துவர் பக்தவச்சலம், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, கே .ஜி. ஐ. எஸ். எல்.  குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பிளஸ் டூ  பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி விழுக்காட்டைக் கடந்த 15 ஆண்டுகளாகப் பெற்றுத் தந்து வரும் தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி ஆ. பிரேமா,  உதவித் தலைமை ஆசிரியர் திரு ஏ. மூர்த்தி,  ஆசிரியர்கள் திரு ஆர். மணிகண்டன்,  திரு  ஆர். நாராயணசாமி,  திரு  பி. பிரகாஷ்,  திரு எஸ். சௌந்தரராஜன்,  திருமதி ஏ. அனந்த கலைச்செல்வி,  திருமதி கே. கலைமணி, திரு  எம். சாலமன் ராஜா ஆகிய 9 பேருக்குச் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

சிறந்த ஆசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்குப் பெற்றோர்-ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் மற்றும் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார், சமூக ஆர்வலர் திருமதி சி. ஷைனிசிவக்குமார் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe