கோவையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்திய பேரணி

published 2 years ago

கோவையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்திய பேரணி

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை  சார்பில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு  பேரணி  இன்று காலை நடைபெற்றது. பேரணியை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் துரைக்கண்ணன், செயலாளர் கோசல் ராம், பொருளாளர் சீதாராமன், இணைச் செயலாளர் த. பரமேஸ்வரன், லயன்  ராஜசேகர் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

பேரணியானது  கோவை ரேஸ் கோர்ஸ்  பகுதியில் உள்ள மாசாணி மருத்துவமனை முன்பு தொடங்கி ஜே.டி அலுவலகத்தில் நிறைவடைந்தது. 

இதில்  ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்கள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு  பதாகைகளை கையில் ஏந்தி  வந்தனர். 

அப்போது  புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை    பொது மக்களிடையே வழங்கி  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். 

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆர்.வி.எஸ் நர்சிங் கல்லூரி முதல்வர் லதா, ஒருங்கிணைப்பாளர் சிவமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe