காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

published 1 year ago

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கோவை பீளமேடு கருப்பராயம்பாளையம் கென்னடி தெருவை சேர்ந்தவரின் 19வயது மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இதையறிந்த அவரது பெற்றோர் தனது மகளை கண்டித்துள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக அவர் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாணவி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe