துடியலூர் அருகே பெண்ணிடம் நகையைப் பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது

published 1 year ago

துடியலூர் அருகே பெண்ணிடம் நகையைப் பறித்த முன்னாள் ராணுவ வீரர் கைது

கோவை: கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். 

மேட்டுப்பாளையம் சாலையில் வந்த போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர். 

இருப்பினும் ராதாமணியின் மகன் அவர்களை வாகனத்திலேயே துரத்தி மடக்கி அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார். அதில் ஒரு நபர் பறித்த தாலி செயினுடன் தப்பி செல்லவே பிடிப்பட்ட மற்றொரு நபரை துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

காவல் துறையினரின் விசாரணையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிநாதன் (43) என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் ஆகியுள்ளதும் தெரிய வந்தது. 

வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பழனிநாதனை கைது செய்தனர். தப்பிச்சென்ற மற்றொரு நபரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்பவரை தேடி வருகின்றனர். 

முன்னாள் ராணுவ வீரரே இது போன்று செயின் பறிப்பில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe