கோவையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

published 1 year ago

கோவையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

கோவை: கோவை ஈச்சனாரியைச் சேர்ந்தவர் உபேந்திரா(36), வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று தனது நண்பர் தர்மேந்திரன் என்பவருடன் ஈச்சனாரி கோயில் பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென உபேந்திராவின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த உபேந்திரா போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்போனைப் பறித்து தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe