இரும்பு கேட் விழுந்து பெயிண்டர் பரிதாப பலி

published 1 year ago

இரும்பு கேட் விழுந்து பெயிண்டர் பரிதாப பலி

கோவை: கோவை புலியகுளம் சவுரிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் பத்மநாபன்(58). பெயிண்டர்.

இவர் நேற்று ராமநாதபுரம் அப்புசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் இரும்பு கேட் மீது பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது இரும்பு கேட் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்மநாபனின் மகன் விஷ்ணுகோபால் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் பாதுகாப்பின்றி ஊழியரை பணியில் அமர்த்திய வீட்டு உரிமையாளர் செல்லமுத்து(64) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe