கோவையில் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு- சிறுவன் கைது

published 1 year ago

கோவையில் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு- சிறுவன் கைது

கோவை: வெள்ளலூர் மகாலிங்க புரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(30). கூலித் தொழிலாளி. இவர் நேற்று போத்தனூர் எருக்கம்பெனி பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சிறுவன் ஒருவன் வழிமறித்தான். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினான். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றான்.

இது குறித்து வினோத்குமார் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பணம் பறித்தது வெள்ளலூர் கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe