கோவையில் தனியார் பஸ்சை பயணிகளுடன் காவல் நிலையம் கொண்டு சென்ற டிரைவர்

published 1 year ago

கோவையில் தனியார் பஸ்சை பயணிகளுடன் காவல் நிலையம் கொண்டு சென்ற டிரைவர்

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நாலாட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (23). இவர் காந்திபுரம் -வெள்ளலூர் செல்லும் தனியார் பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். 

சம்பவத்தன்று காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு பஸ் புறப்பட்டது. அப்போது உக்கடம் பஸ் நிலையம் வரும்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர். பஸ்சில் ஏறியது முதல் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக்கொண்டு பிறருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். 

துரைமுருகன் அதை கண்டிக்கும் போது, அவரை இருவரும் சேர்ந்து மிரட்டினர். பஸ் பயணம் செய்பவர்களிடமும் தகாத வார்த்தைகளால் இருவரும் பேசி வந்தனர். 

போத்தனூர் ஜி.டி.டேங்க் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது இருவரும் எல்லை மீறி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி ஓட்டுனர் பஸ்சை திருப்பி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். காவல் நிலையத்திற்குள் பஸ் செல்வதை கண்டதும் ஒரு வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இன்னொருவரும் இறங்க முயற்சிக்கும் போது பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். 

பின்னர் போத்தனூர் காவல் நிலையத்தில் நடத்துனர் துரைமுருகன் புகார் செய்தார். காவல் துறையினர் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் சுந்தராபுரம் சில்வர் ஜூப்ளி வீதியைச் சேர்ந்த ராகுல் (18) என்பது தெரியவந்தது. காவல் துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய பிரசாந்த் என்ற நபரையும் தேடி வருகின்றனர். 

பயணிகளுடன் பஸ் ஒன்று, காவல் நிலையத்துக்குள் வந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe