10 ஆண்டுகளுக்கு பின் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

published 1 year ago

10 ஆண்டுகளுக்கு பின் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த  திருசெந்தில் மகன் வினோத் (எ) ஆண்டி பண்டாரம் (38 வயது) கடந்த 2013-ஆம் ஆண்டு பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று நேற்று  (13. 04. 2023) குற்றவாளி வினோத்-திற்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் மற்ற குற்றங்களுக்கு சேர்த்து 22 வருட கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 2,000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe