பொள்ளாச்சி அருகே பிளஸ் 2 மாணவியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்ற வாலிபர் கைது

published 1 year ago

பொள்ளாச்சி அருகே பிளஸ் 2 மாணவியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்ற வாலிபர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்தைச் சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஆனைமலையைச் சேர்ந்த பவின் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தக் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் கற்க வைத்தனர். இருப்பினும் மாணவி பவினுடனான காதலை தொடர்ந்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் வேலைக்குச் செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வேலைக்குச் செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் காவல் துறையினர் மாணவியைத் தேடினர். அப்போது தனது காதலன் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் மாணவி இருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர் மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற பவினை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe