கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

published 1 year ago

கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

கோவை: கோவையில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(64). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திரபிரசாத் தெருவில் தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்து டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் அவரது வீட்டின் கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டு குளியலறை அருகே சங்கர் நிர்வாணமாக அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து உடனே ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு தகவக் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe