மது போதையில் மயங்கி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு

published 1 year ago

மது போதையில் மயங்கி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு

கோவை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முராய்(45). இவர் கோவை ஆவாரம்பாளையம் கே.ஆர்.புரத்தில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

குடிப்பழக்கம் உடைய இவர் கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து மது குடித்தார். அப்போது அவர் அதிக மது போதையில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முராய் நேற்று பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe