காப்பரில் தங்க முலாம் பூசி கோவையில் மோசடி.. தந்தை மகன் கைது

published 1 year ago

காப்பரில் தங்க முலாம் பூசி கோவையில் மோசடி.. தந்தை மகன் கைது

கோவை:  கோவையில் தங்க முலாம் பூசப்பட்ட காப்பரை கொடுத்து பணம் மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு(22). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி(65) மற்றும் அவரது மகன் விவேக்(35), ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளோம்.

அதனை மீட்க பணம் வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று வங்கிக்கு சென்ற விசு அவர்களின் நகையை ரூ. 68 ஆயிரம் கொடுத்து மீட்டு அவர்களிடம் கொடுத்தார். பின்னர் இருவரும் நகைகளை மீண்டும் விசுவிடம் கொடுத்து விட்டு ரூ.58 ஆயிரம் வாங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனை தொடர்ந்து விசு அவர்கள் கொடுத்த நகையை வங்கியில் அடகு வைக்க சென்றார்.

அப்போது அவர்கள் கொடுத்தது தங்க முலாம் பூசப்பட்ட காப்பர் என்பது தெரியவந்தது. ஒரிஜினல் நகையை வாங்கி அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe