அறையை தாழிடாமல் தூங்கியதால் செல்போனை பறிகொடுத்த ஊழியர்..

published 1 year ago

அறையை தாழிடாமல் தூங்கியதால் செல்போனை பறிகொடுத்த ஊழியர்..

கோவை: ஈரோடு மாவட்டம் பனங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(27). இவர் கோவை ராமநாதபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு மகேந்திரன் தனது அறையை உட்பக்கமாக தாழிடாமால் தூங்கினார். அப்போது நைசாக உள்ளே நுழைந்த மர்ம நபர் அவரது செல்போனை நைசாக திருடி சென்று விட்டார்.

மறுநாள் எழுந்து பார்த்த போது மகேந்திரன் தனது செல்போன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக மகேந்திரன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், செல்போன் திருடியது கோவையில் தங்கி கூலி வேலை பார்க்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா(22) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe