எங்கே போனது மனிதம்..? கோவையில் உயிரிழந்தவரை சாலையில் சேர் போட்டு அமர வைத்துச் சென்ற நபர்கள்..!

published 1 year ago

எங்கே போனது மனிதம்..? கோவையில் உயிரிழந்தவரை சாலையில் சேர் போட்டு அமர வைத்துச் சென்ற நபர்கள்..!

கோவை: கோவையில் பணியின் போது உயிரிழந்த நபர் ஒருவரை சாலையில் சேர் போட்டு அமர வைத்து விட்டுச் சென்ற கொடூரம் நடைபெற்றுள்ளது. 

கோவை வடவள்ளியில் வேம்பு அவென்யூ பகுதியில் தனியார் அபார்ட்மென்ட் உள்ளது.  இங்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில் அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவரை பணிக்கு அழைத்து  வந்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில், சிலர் உயிரிழந்த ஊழியரை தூக்கி அபார்ட்மென்ட்க்கு  வெளியே உள்ள சாலையில் சேர் போட்டு அமர வைத்து, அவர் மீது போர்வையை போர்த்தியுள்ளனர்.

சுமார் ஒரு மணி  நேரத்திற்கு மேலாகியும் உயிரிழந்தவர் உடல் என்ன ஆனது? என்பது குறித்து அபார்ட்மென்ட்டில் வசிக்கும் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அவரை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது அவரது உடல் அதே இடத்தில்  வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வெளியாகி காண்போரின் நெஞ்சை உருக்கியுள்ளது. 

உயிரிழந்த நபரின் உடலை தூக்கிச்செல்லாவிட்டாலும், குறைந்த பட்ச மனிதம் கூட இல்லாமல் செயல்படும் நபர்களின் செயல் கொடூரமானது என்று இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe