கோவையில் அதி பயங்கர சத்தத்துடன் இடி, பளீர் மின்னலுடன் கன மழை...!

published 1 year ago

கோவையில் அதி பயங்கர சத்தத்துடன் இடி, பளீர் மின்னலுடன் கன மழை...!

  கோவை: கோவையில் பயங்கர சத்தத்துடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

கடந்த வாரம் இடையர்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழைதை ரசித்த பொதுமக்கள் ஐஸ் கட்டிகளை கையில் எடுத்து விளையாடினர்.

 இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. 

மாநகரில், ரயில் நிலையம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், செல்வபுரம் ஆகிய பகுதிகளிலும், புறநகரில் தடாகம், சரவணம்பட்டிழ் கீரணத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

 இதில் செல்வபுரம் சுற்றுவட்டார பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe