கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை திருட்டு

published 1 year ago

கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை திருட்டு

கோவை: கோவையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகையைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை விளாங்குறிச்சி ரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (54), தனியார் நிறுவன மேலாளர்.

 இவர் கடந்த 9ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றார். 

பின்னர் அங்கிருந்து கடந்த 10ம் தேதி இரவு கோவை திரும்பினார். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் நகைகளைத் திருடிச் சென்றுள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த ராஜகோபால் இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். 

மேலும் அங்குப் பதிவாகியிருந்த ஒரு கைரேகை பதிவைக் கைப்பற்றினர்.

 இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe