மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் பலி

published 1 year ago

மாடியில் இருந்து விழுந்து பெயிண்டர் பலி

கோவை : உத்தரப்பிரதேசம் கோரகூரைச் சேர்ந்தவர் பிரபாகர். இவர் கோவை ஆர்.எஸ்.,புரத்தில் தங்கி பெயிண்டராக பணிபுரிந்து வந்தார்.

 கடந்த, 11ம் தேதி வீட்டின் முதல் மாடியில் உள்ள படிக்கட்டின் அருகே சாய்ந்து நின்று பிரபாகர் போனில் பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆர்.எஸ்.,புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe