கார் பாக்கிங்கில் டிரைவர் திடீர் பலி.. என்ன காரணம்? போலீஸ் விசாரணை...

published 1 year ago

கார் பாக்கிங்கில் டிரைவர் திடீர் பலி.. என்ன காரணம்? போலீஸ் விசாரணை...

கோவை: கோவை ஒண்டிப்புதூர் கேகே கார்டனை சேர்ந்தவர் சிவசுரேந்திரன்(35). ஆயில் கம்பெனி நடத்தி வருகிறார்.

இவரிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஒண்டிப்புதூரை சேர்ந்த கார்த்திக் ராஜா(26), என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

 இந்நிலையில், நேற்று சிவசுரேந்திரன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றார்.

காரை கார்த்திக்ராஜா ஓட்டி சென்று அங்குள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து திரும்பிய சிவசுரேந்திரன் டிரைவரை அழைப்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனையடுத்து அவர் கார் பார்க்கிங்கில் சென்று பார்த்தார். அப்போது கார்த்திக் ராஜா சுயநினைவை இழந்து கார் முன்பு மயங்கி கிடந்தார்.

 இதனால் அதிர்ச்சியடைந்த சிவசுரேந்திரன் அவரை எழுப்ப முயன்றார். ஆனால் எந்த அசைவும் இல்லை.

இதனை தொடர்ந்து அவரை தனது காரில் ஏற்றி சிவசுரேந்திரன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா? வேறு காரணமா? 

என ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe