கல்லுாரி மாணவர் தற்கொலை!..

published 1 year ago

கல்லுாரி மாணவர் தற்கொலை!..

கோவை : கோவை காந்தி மாநகரை சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரின் மகன் நவீன் பிரகாஷ்(19). 

இவர் கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம். படித்து வந்தார்.

 பின்பு குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு படிப்பை பாதியில் நிறுத்தினார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையுடன் இருந்து வந்தார். 

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நவீன் பிரகாஷ் நேற்று முன்தினம் வீட்டில் தனது கையை பிளேடால் அறுத்து கொண்டு துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
_________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe