தொழிற்கூடங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

published 1 year ago

தொழிற்கூடங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோவை : கோவையில் பருவமழை அவ்வப்பொது பெய்து வரும் நிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

 

கோவை மாநகரில் பருவமழை தீவிரம் அடையாத நிலையில் அவ்வப்பொது பெய்து வருகிறது. இதனால் மழைநீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உருவாகும் நிலை உள்ளது. 

இதனை அடுத்து கோவை மாநகராட்சி நிர்வாகம் டெங்கு தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வீடுவீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா? குடிநீர் தண்ணீர் தொட்டியில் கொசு புழுக்கள் உள்ளதா? என தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே கோவை மாநகரின் கணபதியில் சிறிய தொழிற்கூடங்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் அங்கு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ‘‘ தொழிற்கூடங்கள் நிறைந்துள்ள கணபதி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய நட்டு போல்ட் போன்ற சிறிய ரக இரும்பு பொருட்கள் வெளியில் தூக்கி ஏறியப்படுகின்றன. 

மழை பெய்யும் போது இதில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் உருவாகிறது. தொழிற்கூடம் உரிமையாளர்களிடம் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாநகர் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கணபதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன,’’ என்றார்.

 

____

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe