கோவையில் நடந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது..! போலீசார் பிடியில் தப்பிக்க முயன்ற போது கால் உடைந்தது..!

published 1 year ago

கோவையில் நடந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது..! போலீசார் பிடியில் தப்பிக்க முயன்ற போது கால் உடைந்தது..!

கோவை : கோவையில்  நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் சத்யபாண்டி என்ற ரவுடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படு கொலை செய்யப்பட்டார்.

 இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சஞ்சய்ராஜா உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில், சஞ்சய் ராஜா தனது நண்பரான தில்ஜித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி சத்தியபாண்டியை கொலை செய்தது தெரியவந்த்து.

தலைமறைவாக இருந்த தில்ஜித்தை போலீசார் தேடி வந்தனர். கடந்த 3 மாதங்களாக டெல்லி, மும்பை என வெளிமாநிலங்களில் தலைமறைவாக இருந்த தில்ஜித் நேற்று இரவு கோவை வந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோது போலீசார் பிடியில் இருந்து அவர் தப்பிக்க முற்பட்டார். அப்போது அவர் கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்தது. 

போலீசார் அவரை கைது செய்து தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். போலீசார் பிடியில் தப்பிக்க முயன்ற ரவுடி கால் முறிந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe