கோவை பீளமேட்டில் கத்திமுனையில் மிரட்டி மருத்துவமனை பெண் ஊழியரிடம் செயின், செல்போன் பறித்து தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

published 1 year ago

கோவை பீளமேட்டில் கத்திமுனையில் மிரட்டி மருத்துவமனை பெண் ஊழியரிடம் செயின், செல்போன் பறித்து தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சந்தியா (21). இவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ம் தேதி சந்தியா தனது சொந்த ஊரான அறந்தாங்கி சென்றார். 

பின்னர் அங்கிருந்து தனது சகோதரி சுகந்தியை அழைத்துக்கொண்டு நேற்று கோவை வந்தார். அவர்கள் நேருநகர் 6வது தெருவில் உள்ள தங்களது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சந்தியாவை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயின் மற்றும் ஒரு செல்போனை பறித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சந்தியாவும், அவரது சகோதரியும் கூச்சல் போட்டனர். 

அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் செயின் மற்றும் செல்போனுடன் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சந்தியா பீளமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின், செல்போன் பறித்து தப்பிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe