மாற்றுத்திறனாளிக்காக கொடுக்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர் அகற்ற வைப்பதாக புகார்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா.

published 1 year ago

மாற்றுத்திறனாளிக்காக கொடுக்கப்பட்ட கடையை திமுக கவுன்சிலர்  அகற்ற வைப்பதாக புகார்- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா.

கோவை

 

கோவை புலியகுளம் அருகே உள்ள கிட்னி சென்டர் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரீனா ரோஸ்லின். மாற்றுத்திறனாளியான இவர் தனது கணவர் சிவகுமார் உடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மாற்றுத்திறனாளியான பெண் தர்ணாவில் ஈடுபட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து ரீனா ரோஸ்லின் தனது கடையை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருவதாகவும், புலியகுளம் கவுன்சிலர் முனியம்மா மற்றும் அவரின் கணவர் பாலமுருகன் பெயரில் திமுக பொறுப்பாளர் கோபால் என்பவர் நடத்தி வரும் கடையை தர வலியுறுத்தியதாகவும் ஆனால் நான் தர மறுத்ததால் இந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீரென கடையை எடுக்க வற்புறுத்துவதாகவும் இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து ரீனா ரோஸ்லின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மாற்றுத்திறனாளி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe