கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

published 1 year ago

கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

கோவை

கோவையில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் நகை பறித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி பிரேமா(56). இவர் நேற்று பக்கத்து தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றார். 

பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேமா நகைகளை விடாமல் கைகளால் பிடித்து கொண்டார்.

 ஆனால் செயின் துண்டாகி அரை பவுன் செயினை அந்த நபர் பறித்து கொண்டு தப்பினார். மீதமுள்ள ஒன்றரை பவுன் தப்பியது. இது குறித்து பிரேமா குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை இருகூர் மகாகவி நகரை சேர்ந்தவர் ராதாமணி(65). இவர் நேற்று வீட்டு முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ராதாமணியிடம் முகவரி கேட்டார். 

அவர் முகவரி சொல்லி கொண்டிருக்கும் போது அந்த நபர் திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அருகே நிறுத்தியிருந்த தனது பைக்கில் ஏறி தப்பி சென்றார். இது குறித்து ராதாமணி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe