கோவையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது


கோவை, ஜூலை 5-

கோவையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.
கோவை கடைவீதி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஜிஎம் நகர் மஜித் காலனியில் சந்தேகம்படும் படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குறிச்சி சுந்தராபுரத்தை சேர்ந்த பாவூர்தீன்(30), தெற்கு உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவர் ரியாஷ்(23) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, ஒரு பைக், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல், பீளமேடு பகுதியில் அங்குள்ள தனியார் பள்ளி பின்புறம் உள்ள காலி இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி சஞ்சய் குரு(30), சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த சந்தீவ்(27) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-------------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe