பஸ்சில் பயணித்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

published 1 year ago

பஸ்சில் பயணித்த மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோவை: கோவை கணபதி சண்முகம் புதூரை சேர்ந்தவர் சண்முகம் மனைவி தனலட்சுமி(65). இவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சிவானந்தகாலனி சென்றார்.

ஆனால் அவரது உறவினர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விட்டதால், தனலட்சுமி தனது வீட்டுக்கு செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து கணபதி செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் தனலட்சுமி கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க நகையை பறித்து சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe