கோவையில் ஐ.டி ஊழியர் வீடு உள்பட 2 இடங்களில் நகைகள் கொள்ளை..!

published 1 year ago

கோவையில் ஐ.டி ஊழியர் வீடு உள்பட 2 இடங்களில்  நகைகள் கொள்ளை..!

கோவை

கோவை வீரகேரளம் அருகே உள்ள சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 37). ஐ.டி ஊழியர். இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர்களின் வீட்டிற்கு சென்றார். பின்னர் கடந்த 11ம் தேதி வேலை விஷயமாக சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க வலையளல், லேப்டாப், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கீர்த்தி ராஜ் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐ.டி ஊழியர் வீட்டில் நகை, லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதே போல் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ் புரத்தை சேற்ந்தவர் பிரியா (வயது 25) சம்பவத்தன்று இவர் வீட்டி பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உட்பட 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பிரியா மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe