கோவையில் பாம்பே சர்க்கஸ் பார்த்த ஆதரவற்ற மக்கள் நெகிழ்ச்சி!!!

published 1 year ago

கோவையில் பாம்பே சர்க்கஸ் பார்த்த ஆதரவற்ற மக்கள் நெகிழ்ச்சி!!!

கோவை : கோவையில் தன்னார்வலர்கள் மற்றும் பாம்பே சர்கஸ் நிர்வாகத்தினர் இணைந்து முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் 2 ஆயிரம் பேரை இலவசமாக பாம்பே சர்க்கஸ் காட்சிக்கு அழைத்துச் சென்றனர்.

கோவையில் தி கிரேட் பாம்பே சர்க்கஸ் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இங்கு மூன்று காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே கோவையில் 15க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், கேட்டரிங் சங்கத்தினர்  இணைந்து முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை பாம்பே சர்க்கஸ் பார்க்க அழைத்து வந்தனர்.

இந்த சிறப்பு சர்க்கஸ் காட்சியை பார்க்க வந்த  2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு தன்னார்வ அமைப்பினர் சார்பில் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், காலை மற்றும் மதிய உணவு  வழங்கப்பட்டன.

இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு உதவினர்.

நீண்ட நாட்கள் கழித்து சர்க்கஸ் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மீண்டும் ஒரு முறை சர்க்கஸ் பார்க்க ஆசைப்படுவதாகவும் சர்க்கஸ் காட்சியை பார்த்தவர்கள் நெகிழ்ச்சிபட தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe