ரேஸ்கோர்ஸ்-ல் கல்லூரி பேராசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு

published 1 year ago

ரேஸ்கோர்ஸ்-ல் கல்லூரி பேராசிரியையிடம் 3 பவுன் நகை பறிப்பு

கோவை: கோவையில் கல்லூரி பேராசிரியையிடம் 3 பவுன் நகை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்சை சேர்ந்தவர் ராஜகுமாரி(53). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரேஸ்கோர்சில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அதேபோல், நேற்று இரவில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். தாமஸ் பார்க் அருகே சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி சத்தம் போட்டார்.

ஆனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ராஜகுமாரி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe