அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

published 1 year ago

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கோவை: கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கோமதிசங்கர்(24). பெயிண்டர். இவர் நேற்று அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோமதி சங்கரிடம் பணம் கேட்டு மிரட்டினார். 

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை அவரது கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 400 பறித்து விட்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியில் கோமதி சங்கர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

 பின்னர் அவரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அதில், அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்தது கணபதி மூர்மார்க்கெட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூர்யா(25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe