கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

published 1 year ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாற்றுத்திறனாளிகளின்,  பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் ஏழு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்களுடன் கூடிய வாகனங்கள் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனை அடுத்து அடுத்த மாதம் 12ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe