கோவையில் பணம், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள்

published 1 year ago

கோவையில் பணம், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள்

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் பணம், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனி வடகோவை மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் முகமத் ரபீக்(37). இவர் ஆவாரம்பாளையத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் சாய்பாபா காலனி கூட்ஷெட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் முகமத் ரபீக்கை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த அருள் செல்வன்(25), மற்றும் கவுண்டம்பாளையம் சிவா நகரை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் சுந்தரம் தெருவை சேர்ந்தவர் லெனின் தாஸ்(37). நகைப்பட்டறை தொழிலாளி. இவர் நேற்று பஸ்சில் சென்று கொண்டிருந்தார். உக்கடம் பழைய மீன் மார்க்கெட் அருகே நிறுத்தத்தில் பஸ் நின்ற போது அருகே இருந்த ஒருவர் திடீரென லெனின் தாசின் செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

உடனே சுதாரித்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், செல்போன் பறித்தது கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த பஷீர்(49) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.

இதேபோல், கோவை மதுக்கரை குமிட்டிபதியை சேர்ந்தவர் பஞ்சலிங்கம்(30). இவர் நேற்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி செல்வதற்காக பஸ்சில் ஏறி நின்றிருந்தார். அப்போது அருகே நின்றிருந்த 2 பேர் திடீரென பஞ்சலிங்கத்தின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து அவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், செல்போன் பறித்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த தொழிலாளி ஸ்டீபன் ராஜ்(24), சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe