சத்தி ரோட்டில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருட்டு

published 1 year ago

சத்தி ரோட்டில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருட்டு

கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(42). இவர் கோவை சத்தி ரோட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பரமேஸ்வரன் கடையை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை திறக்க வந்த போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ. 38 ஆயிரத்தை காணவில்லை. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் பணத்தை திருடி சென்றுள்ளார்.

இது குறித்து பரமேஸ்வரன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு பணம் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe