கோவையில் முன் விரோதம் காரணமாக வாலிபரைக் கடத்த திட்டம்..!

published 1 year ago

கோவையில் முன் விரோதம் காரணமாக வாலிபரைக் கடத்த திட்டம்..!

கோவை: கோவையில் முன் விரோதம் காரணமாக வாலிபரை காரில் கடத்த திட்டமிட்ட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பேரூர் ரோடு அன்னை வேளாங்கண்ணி சர்ச் அருகே மாஸ்க் அணிந்தபடி 5 பேர் கும்பல் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர். இதனைப்பார்த்த போலீசார் அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்க முற்பட்டனர். 

ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதில் 4 பேரை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அந்த கும்பல் முன் விரோதம் மற்றும் பணத்தகராறு காரணமாக கரும்புக்கடையை சேர்ந்த அஜ்மல் கான் என்பவரை காரில் கடத்தி சென்று தாக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.

 இதனையடுத்து போலீசார் வாலிபரை காரில் கடத்த நோட்டமிட்டுக் காத்திருந்த திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார்(27), திருப்பூர் பாலப்பாளையத்தை சேர்ந்த வெல்டர் விவேக்(29), திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார்(28), திருப்பூர் குறிச்சி நகரைச் சேர்ந்த தென்பாண்டி(22) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். தப்பி ஓடிய சூர்யா என்பவரைத் தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe