அம்மாடியோவ்..! ஆடி 18ம் தேதி நம்ம கோவை மக்கள் எத்தனை கிலோ தங்கம் வாங்கிருக்காங்க பாருங்க..

published 1 year ago

அம்மாடியோவ்..! ஆடி 18ம் தேதி நம்ம கோவை மக்கள் எத்தனை கிலோ தங்கம் வாங்கிருக்காங்க பாருங்க..

கோவை : தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆடி 18-ம் தினத்தன்று, தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது மக்களின் ஐதீகம். நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. கோவையில் உள்ள நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமான நகைகளைத் தேர்வு செய்து வாங்கி சென்றனர். 

இதனால் கடைவீதி பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:- ஆடி மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினமும் சராசரியாக 70 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடிப்பெருக்கு தினமான நேற்று கோவை மாவட்டம் முழுவதும் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.120 கோடியாகும். 

பெரும்பாலும் சிறிய ரக நகைகளான மோதிரம், தோடு, குறைந்த சவரனில் தயாரிக்கப்பட்ட செயின் உள்ளிட்ட நகைகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. இவற்றைத் தவிர்த்து வளையல்கள், ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளும் விற்பனையாகின. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe