கோவையில் (செவ்வாய்க்கிழமை) 29ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

published 1 year ago

கோவையில்  (செவ்வாய்க்கிழமை) 29ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கோவையில் (செவ்வாய்க்கிழமை) 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2023-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 29.08.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக அவ்வலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிர்வரும் 02.09.2023 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறை நாள்,செலவாணி முறிச் சட்டம் 1881 (Negotiable Instruments Act 1881) .இன் கீழ் வராது என்பதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe