கோவையில் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவமதித்த 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவமதித்த 2 பேர் கைது

கோவை : கோவை தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் 37 வயது பெண் திருமணமானவர். இவர் நேற்று இரவு நியூ சித்தாபுதூரை சேர்ந்த ராஜூ(32) என்பருடன் இரவு உணவு அருந்த பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தனர். அங்கு ராஜூவின் நண்பர் குன்னூரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ்(40) என்பவரைச் சந்தித்தனர். 

அப்போது இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை அவமரியாதையாக நடத்தியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கட்டிட, உள் அலங்கார வேலை செய்து வரும் ராஜூ மற்றுன் ஜோன் பிரான்சிஸ் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe