கோவை குனியமுத்தூரில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் பறிமுதல்

published 1 year ago

கோவை குனியமுத்தூரில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் பறிமுதல்

கோவை : கோவை ராமநாதபுரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

அப்போது சுங்கம் பார்க் அருகே நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் அவரிடம் சோதனை செய்த போது அவர் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

 இதனையடுத்து போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலி ஒசாமா(23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா மற்றும் 3.78 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல், குனியமுத்தூர் குறிச்சி குளக்கரை அருகே சிலர் போதை மாத்திரை பதுக்கி விற்பனை செய்வதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். 

அங்கிருந்து 3 பேரை மடக்கி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில் அவர்கள் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போத்தனூர் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி(28), குறிச்சி கார்டனை சேர்ந்த ஜாபர் சாதிக்(29), குனியமுத்தூர் கேபிபி நகரை சேர்ந்த சதாம் உசேன்(29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து 83 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe