கோவை ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

published 1 year ago

கோவை ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

கோவை :  கோவை கணபதி மாநகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் பட்டுகுமார் துரைராஜ்(41). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று சங்கனூர் ரோடு அண்ணாநகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் மது குடிக்கப் பணம் தருமாறு கேட்டார். 

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 500 பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து ஜேசுதாஸ் பட்டுகுமார் துரைராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தனர். 

அதில், கத்தி முனையில் பணம் பறித்தது சங்கனூர் மெயின் ரோடு காமராஜபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணவேல்(18) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe