கோவையில் வீடு புகுந்து திருட முயற்சி

published 1 year ago

கோவையில் வீடு புகுந்து திருட முயற்சி

கோவை : கோவை குனியமுத்தூர் எஸ்என்ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் ரகுமான்(34). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கேரளா சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனைப் பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் பைசல் ரகுமானை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

அவர் கோவை திரும்பி வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்பதும், திருட முயற்சி நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது. அவர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருட முயற்சி செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe