கோவையில் 340 போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் 340 போதை மாத்திரைகள் பறிமுதல் - 2 பேர் கைது

கோவை : கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரோந்து சென்று போதைப்பொருள் விற்பவர்களைக் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள மாநகராட்சி கழிப்பிடம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். 

அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த கோவை காந்திபார்க் எம்என்ஜி தெருவை சேர்ந்த காளிதாசன்(23) என்பவரைக் கைது செய்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், பீளமேடு ரயில்வே நிலையம் ரோடு அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீசார் அங்குச் சென்று சோதனை நடத்தினர். வாலிபர் ஒருவரைப் பிடித்து சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். 

அதில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். சோதனை செய்த போது அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த பீளமேடு சாய்பாபா கோயில் 2வது தெருவைச் சேர்ந்த சிவதாசன்(37) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 340 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe