கோவையில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

published 2 years ago

கோவையில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1
 

கோவை, ஜூன்.12- கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்  செல்வகுமார். இவரது மகள் அனுசியா (வயது 19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அனுசியாவிற்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம். அதற்காக இயற்கை அழகுகளை, தனது நண்பர்களைப் புகைப்படம் எடுத்துக் கொடுப்பார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுசியா தான் புகைப்படம் எடுப்பதற்காக நண்பர்களிடம் உதவி கேட்டதாகத் தெரிகிறது.

இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் எலி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். சம்பவத்தன்று அனுசியா மீண்டும் நண்பர்களிடம் புகைப்படம் எடுப்பது குறித்துப் பேசினார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி கண்டித்தனர்.

இதனால் விரக்தி அடைந்த அனுசியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe