மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுங்கள்..கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுரை..

published 1 year ago

மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுங்கள்..கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுரை..

கோவை: மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணைய பிரதாப் அறிவுரை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண் 42க்கு ய்ட்பட்ட தவசி நகரில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணை பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், அப்பகுதியில் பழுதடைந்த மழைநீர் வடிகாலை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியளாருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் பிரவீன்ராஜ், உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் எழில், உதவி பொறியாளர் ஐசக் ஆர்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe