கோவையில் 1631 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் 1631 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது

கோவை: கோவை வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வடவள்ளி போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலை சேர்ந்த தொழிலாளி கார்த்திக்(38), புதுக்கோட்டையை சேர்ந்த வீரசிங்கம்(30) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1631 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe