கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை- கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த மக்கள்...!

published 1 year ago

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை- கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த மக்கள்...!

கோவை: கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதை முன்னிட்டு கோவை மக்கள் அவர்களது இல்லங்களின் முன் கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

 

கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினமே தமிழகத்தில் மகளிர் சிலருக்கு உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ளவர்களுக்கு இன்று செலுத்தப்பட உள்ளது.


இந்நிலையில் மகளிர் உரிமை தொகையை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை வெள்ளலூர், செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது இல்லங்களின் முன்பு கோலமிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe