விநாயகர் சதுர்த்தி தினம்- புலியகுளம் விநாயகர் சிலைக்கு இரண்டு டன் மலர்களால் அலங்காரம்...

published 1 year ago

விநாயகர் சதுர்த்தி தினம்- புலியகுளம் விநாயகர் சிலைக்கு இரண்டு டன் மலர்களால் அலங்காரம்...

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் விநாயகர் சிலைக்கு இரண்டு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு  அதிகாலை முதலே பல்வேறு  அலங்காரங்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று  சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு 2 டன் மலர்களால் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும் இதன் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு காலை முதல ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe