கோவில் விழாவில் இரு தரப்புக்கு இடையேயான தகராறில் பெண் கொலை.

published 2 years ago

கோவில் விழாவில் இரு தரப்புக்கு இடையேயான தகராறில் பெண் கொலை.

கோவில் விழாவில் இரு தரப்புக்கு இடையேயான தகராறில் பெண் கொலை. 

திருச்சி: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

அம்மன் வீதி உலா நிகழ்ச்சிக்காக டிராக்டரில் சாமி சிலையை யாருடைய டிராக்டரில் ஏற்றுவது என்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் சந்திரசேகர்,கார்த்திக்  ஆகியோருக்கும் மற்றோர் தரப்பான வினோத் முரளிதரன் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

இந்த நிலையில் அம்பேத்கார் நகர் தெற்கு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சந்திரசேகரும் அவருடைய சகோதரர் கார்த்திக்கும் சென்ற போது அங்கிருந்த அருள் முரளிதரன் ஆகியோர் சேர்ந்து பிரசாந்த்,வினோத் மற்றும் உறவினர் பாண்டியன் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

மகன்கள் தாக்கப்படுவதை நேரில் பார்த்த அவர்களுடைய தாய் சிவகாமி சண்டையை விலக்கி விட சென்றார். அப்போது அவரும் தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்ததில் காயமடைந்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார்,முசிறி டிஎஸ்பி அருள்மணி,துறையூர் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் நேரில் சென்று விசாரனை மேற்கொண்டனர்.சிவகாமியின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத விசாரணைக்காக அனுப்பி வைத்த போலீஸார் இந்த சமபவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe