சனாதனம் குறித்து பேசியதற்கு சட்டரீதியாக சந்தித்தாக வேண்டும்- தமிழிசை செளந்தரராஜன்…

published 1 year ago

சனாதனம் குறித்து பேசியதற்கு சட்டரீதியாக சந்தித்தாக வேண்டும்- தமிழிசை செளந்தரராஜன்…

கோவை: சனாதனம் குறித்து பேசியதற்கு சட்டரீதியாக சந்தித்தாக வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போ பேசிய அவர், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும்,
நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி என தெரிவித்தார்.
இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும் எனவும் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்த அவர்,
கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை என்றார்.
உயர்கல்வி மருந்துவப்படிப்பில் சற்று ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளதாகவும் அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஜீரோ பர்சண்டேஜ் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்த அவர்,
இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு என்றார்.

மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி‌ இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது என தெரிவித்தார். 
மருத்துவ உயர் கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் கிடைக்கவில்லை, எனவும் கூறினார். மேலும் இதில் ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது எனவும் கூறினார்.

மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் 
கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார். எனவே இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல எனவும்
அரசுக் கல்லூரிகளும் பலனடையும் தனியார் கல்லூரிகளும் பலனடையும் என்றார். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் 
ஏன்‌ மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்? என கேள்வி எழுப்பினார். 
மேலும் நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்?
இதற்கு முன்பு எப்போது இப்படி நடந்தது? என கேள்வி எழுப்பினார்.

இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா என நீங்கள் சொல்லுங்கள் எனவும் இப்படி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

சனாதனம் குறித்து பேசியதற்கு அவர்கள் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும் என கூறிய அவர் அநாவசியமான சத்தம் போடாமல் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பேசியது தவறு தான், இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்தும் போது, குடியரசு தலைவர் அழைக்கப்படுவார் எனவும் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு நடிகை வருவதை தவறு என சொல்வது சரியா? என கேள்வி எழுப்பி அவர்
எது தான் இவரது பொது நோக்கு? என கேள்வி எழுப்பினார்.

இன்று குடியரசு தலைவருக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள், குடியரசு தலைவராக ஏன் போட்டியிட்ட போது 
ஏன் ஆதரிக்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.
பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும் என கூறினார்.

நீங்கள் ஒட்டு போட்டு ஜனாதிபதி வெற்றி பெறவில்லை என குறிபிட்ட தமிழிசை செளந்தரராஜன், அவர் ஜனாதிபதியாவதற்கு பிரதமர் தான் காரணம் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe